கூவம் அடையாறு பக்கிங்காம்
சென்னையின் இன்றைய வரலாறு என்பது அதன் சிறப்புமிக்க நதிகரைகளின் மீது தான் கட்டமைக்கப்பட்டுள்ளது, பரபரப்பான இந்நகருக்கு குறுக்கும், நெடுக்குமாக செல்லும் நீர் வழித்தடங்களை பற்றி கள ஆய்வுகளுடன் எழுதப்பட்டுள்ள அற்புதமான நூல், சமகாலத்தில் நாம் தொலைத்த ( அழித்த ) நீர் ஆதாரங்களின் விளைவு இன்று சென்னை போன்ற பெரு நகரங்கள் பல்வேறு நீரியல் சிக்கலுக்குள் முழ்கி போய்யுள்ளன, சென்னையின் உண்மையான நீர் ஆதாரங்களை தெரிந்து கொள்வது குறைந்தபட்சம் அடுத்து வரும் தலைமுறை இந்நகரில் வாழ்வதை உறுதி செய்யலாம், அதற்கு நாம் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது. சென்னையை போன்ற நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய நகரம் உலகில் எங்கும் காண முடியாது, நீங்கள் லண்டன் சென்றால் அங்கு தேம்ஸ் நதி மட்டும் இருக்கும் வாஷிங்டன் போனால் போட்டோமேக் நதி தான் இருக்கும், எந்த நகரை எடுத்து கொண்டாலும் அங்கு ஒரு நதி அதிகபட்சம் இரண்டு நதி தான் உள்ளன, ஆனால் சென்னையில் மட்டும் தான் மூன்று ஆறுகள் ஓடுகின்றன, இவை மூன்றையும் இணைக்கிறது மிக நீண்ட பக்கிங்காம் கால்வாய், இது தவிர சென்னையில் மட்டும் 15 பெரிய கால்வாய் அதுவும் போக