ஒக்கேனக்கல் காட்டு பயணம்
ஒகேனக்கல் பயணக் கட்டுரை "அடர்ந்த காட்டில் யாருமற்ற ஏகாந்தத்தில் மழையோடு நனைந்து கொண்டே பயணிப்பது போன்றதொரு இனிமை வேறெங்கும் கிடைத்திடாது" ஒகேனக்கல் அருவிக்கு செல்ல வேண்டும் என நீண்ட நாட்களாக நினைவில் இருந்த பயணம் இம்முறை நிறைவேறியது. கடந்த முறை ஓசூர் வந்த போதே திட்டமிட்ட பயணம் ஆனால் அப்போது பெய்திருந்த கடும் மழையால் ஒகேனக்கலுக்கு செல்ல முடியாமல் போனது. இம்முறை மழை வந்தாலும் பரவாயில்லை நிச்சயம் பயணத்தை தொடர வேண்டும் என முடிவெடுத்தே கிளம்பினேன். ஓசூரிலிருந்து பயணத்தை தொடங்கிய போது ஓரளவு நல்ல வெயில்நிறைந்திருந்தது ஆனால் தேன்கனிக்கோட்டையை அடைந்த போது வானம் கருமேகங்களால் சூழத் தொடங்கியது. அடுத்த பயணத் திட்டத்தில் வைத்திருக்கும் பஞ்சபள்ளி அணை, பெட்டமுகிலாம் செல்லும் பாதை இடது பக்கமாக திரும்பியது. வீட்டிலும் பெட்டமுகிலாம் சென்று விட்டு வருகிறேன் என்று தான் சொல்லியிருந்தேன். ஆனால் நான் ஒகேனக்கல் செல்வது வீட்டில் தெரியாது. தமிழ்நாட்டில் யானை பெருமளவில் கூட்டமாக வலசை செல்லும் காட்டுப்பகுதி என்பதால் கவனத்தோடே பயணித்தேன். தேன்கனிக்கோட்டையை தாண்ட