சத்தியமங்கலம் கானுலா பகுதி - 6
எனக்கான நாள் - 6 #SathyamangalamForest #KundriMalai நாங்கள் நேற்று மாதேஸ்வரன் மலைக்கு கிளம்பிய இரவு குஜ்ஜம்பாளையத்தை சேர்ந்த கண்ணப்பன் அண்ணனின் சோளக்காட்டில் யானைகள் இறங்கி அங்கிருந்த சோளப்பயிர்களையும், கம்பு பயிர்களையும் சாப்பிட்டுவிட்டிருந்தன. கண்ணப்பன் அண்ணாவும், ஊர்காரர்களும் இரவு முழுக்க யானைகளை பாங்காட்டிற்குள் விரட்டிக் கொண்டிருந்துள்ளனர். மனிதனை விட புத்திசாலியான யானைகளை காட்டுக்குள் விரட்டுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இரவு முழுவதும் யானைகள் மலைக்கு இடது பக்கமும் வலது பக்கமும் மாறி மாறி இறங்கி போக்கு காட்டியிருந்துள்ளன. ஆயினும் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நேற்றைய இரவு முடிந்துள்ளது. காலை உணவு சாப்பிட கோவிலூரில் இருக்கும் உணவகத்திற்கு சென்றிருந்தோம். அப்போது அணில் நத்தம் பகுதியை சேர்ந்த சோளக பெண் குழந்தை கடையில் எங்களை பார்த்ததும், அண்ணா நீங்க திரும்ப வந்து பனையோலையில் பொருள் செய்து தரேன்னு சொல்லிட்டு போனீங்க ஆனா வரவேயில்ல என சொல்லி கோவித்துக் கொண்டாள். சரி கோவிச்சிகாதடா சீக்கரம் வந்துடுறேன்னு சொல்லி அவங்களை சமாதானப்படுவ