சத்தியமங்கலம் கானுலா - பகுதி 7
எனக்கான நாள் - 7 #SathyamangalamForest #பெரியசாமி #யானை #பங்காளி #விபத்து #மரணம் கடந்தாண்டு டிசம்பர் மாத இறுதியில் சத்தியமங்கலம் காட்டுப்பயணத்தை முடித்துவிட்டு வந்த பிறகு சத்தியமங்கலம் காடுகளில் பழங்குடி குழந்தைகளுக்காக பணி செய்யும் நண்பர் சதிஸ் அழைப்பு கொடுத்திருந்தார். தோழர் குன்றி மலையில் உள்ள நிறைய குழந்தைகள் உங்களை கேட்டதாக சொல்ல சொல்லியிருந்தனர். நீங்கள் வந்து பனையோலையில் பொருட்கள் செய்து கொடுத்ததில் அவர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் விரைவில் குழந்தைகள் சார்ந்த நிகழ்விற்கு அழைப்பதாக சொல்லியிருந்தார். அவர் அப்படி சொன்னதில் இருந்தே மீண்டும் சத்தியமங்கலம் மலைக்கு செல்லவிருக்கும் நாளுக்காக மனம் ஏங்க ஆரம்பித்தது. சில வாரங்கள் கழித்து தோழரிடம் இருந்து அழைப்பு வந்தது. தோழர் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியின் நாட்டு நலப்பணி மாணவர்கள் கடம்பூர் அடுத்துள்ள உகினியம் மலைகிராமத்தில் இருக்கும் தொடக்க நிலைப்பள்ளியை சீரமைக்க இருக்கிறார்கள், ஒரு வாரம் நடக்கவிருக்கும் அந்நிகழ்விற்கு நீங்கள் அவசியம் வரவேண்டும் என்றார். மலைக்கு செல்வதற்காகவே காத்திர