ஜவ்வாதுமலை கானுலா - 12 (பகுதி 3)
#ஜவ்வாதுமலை #கிழக்குதொடர்ச்சிமலை #கர்நாடககிரி_கோட்டை பகுதி 3:- மீண்டும் பழங்குடி குட்டி அண்ணா முக்குத்தி கல் மலையை கடந்த பின் அடுத்து தெரியும் அந்த நெட்டு மலையை கடந்துவிட்டால் பிறகு கோட்டை வரை சமதளமான பாதை தான் என்றார் சங்கர். எனக்கும் ஒரு கட்டத்தில் எப்போ தான் நெங்குத்தான மலையேற்றம் இல்லாத சமதள மலை பாதை வருமோ என்றாயிற்று. சங்கர் கை காட்டிய அந்த நெட்டுமலையை அடைந்த பின் வந்த வழியை திரும்பி பார்த்த போது மூக்குத்திகல் மலை தூரத்தில் இருந்து. அடிக்கடி நாய் குரைக்கும் சத்தமும், யாரோ விசில் அடித்து தன் இருப்பதை சொல்லுகிற சத்தமும் நாங்கள் முக்குத்திகல் மலையில் இருக்கும் போதே கேட்டது. சங்கரிடம் விசாரித்த போது சிரித்துக் கொண்டே சொன்னார் குட்டி அண்ணா மேல வந்துட்டாங்க என்று. நாங்கள் நான்கு மணி நேரமாக மலை ஏறிக்கொண்டு இருக்கிறோம், இன்னும் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்தால் தான் கோட்டைக்கு சென்று சேர முடியும். ஆனால் குட்டி அண்ணாவுக்கு நாங்கள் அழைப்பு கொடுத்து பேசும் போதே மணி மதியம் 12 ஆகியிருந்தது, கிட்ட தட்ட ஒன்னரை மணி நேரத்தில் அவர் கோட்டை வாசலுக்கு வந்துவிட்டார் அதுவும் சமையல