ஜவ்வாதுமலை கானுலா - 11 (பகுதி 2)
ஜவ்வாதுமலை கானுலா - இரண்டாம் நாள் "ஆசியாவின் பெரிய (நீர்மத்தி) அடி மரமும் - பெருங்கற்கால ஈமை சின்னங்களும்" நேற்று இரவு முழுவதும் பெய்த கடும் மழையில் எங்கள் கூடாரம் ஏறக்குறைய தண்ணீரில் மிதந்து கொண்டு தான் இருந்தது. கடுமையான குளிரால் இரவு சில மணி நேரமே தூங்க முடிந்தது. அதிகாலையில் மீண்டும் அருவிக்கு சென்று அங்கிருந்து சூரிய உதயத்தை பார்க்கலாம் என இரவு திட்டமிட்டு இருந்தோம் ஆனால் இரவு பெய்த கடும் மழையாலும், மேகமூட்டத்தாலும் அருவிக்கு செல்வது சாத்தியமில்லை. மேலும் குளிர் நடுக்கத்தில் இருந்து மீளமுடியாமல் எல்லோரும் காலையில் எழுந்து கொள்ளவே 8மணிக்கு மேல் ஆனது, தோழி சாரு மலை கிராமத்தில் யார் வீட்டிலோ இருந்து கொண்டு வந்த கருப்பட்டி காபி அந்த குளிருக்கு இதமான சூட்டை கொடுத்தது. நேற்று வாகன பழுது பார்த்துக் கொண்டு வந்த நண்பர் சதிஷ் அந்த மலை கிராமத்திற்கு வந்து சேர்ந்த போது ஊர் மக்களிடம் தங்குவதற்கான இடமும், மாற்று பாதுகாப்பு ஏற்பாடும் பேசி வைத்திருந்தார். நேற்று அவர் கிராமத்திற்கு வந்து சேர்ந்ததும் எங்களை காண அருவி வழியே இரண்டு மூன்று முறை வந்து பார்த்துள்ளார்,