ஜவ்வாதுமலை கானுலா - 14
ஜவ்வாதுமலையின் 3000 ஆண்டு அதிசயம் சில மாதங்களுக்கு முன் நானும் பங்காளி மதன் ஜவ்வாதுமலையில் கீழ்சிப்பிலி என்ற மலைகிராமத்தில் குள்ளர் குகை என அழைக்கப்படும் பெருங்கற்கால ஈமை சின்னங்களை பார்த்திருந்தோம். அந்த பயண அனுபவத்தை பற்றி திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் ஒருங்கிணைப்பாளர் Bala அண்ணனிடம் பேசும் போது, இந்த மலை முழுக்க இன்னும் நிறைய இடங்களில் இது போன்ற தொல் எச்சங்கள் நிறைந்து இருக்கு தம்பி என்று சொல்லியிருந்தார். ஆம், அவர் கூறியது மிகச்சரி. எப்போதும் போல் அல்லாமல் இம்முறை தனியாக ஜவ்வாதுமலைக்கு சென்றிருந்தேன். சூரிய உதயத்தை ஜவ்வாதுமலையின் மீது இருந்து பார்த்துவிட வேண்டி விடியற் காலை 5.30மணிக்கே வீட்டில் இருந்து கிளம்பினேன். மலைப்பாதை முழுக்க மூடுபனி அதிகமாக இருந்ததால் பொறுமையாகவே போக மூடிந்தது. மலைக்கு மேலே செல்வதற்குள் சூரிய ஒளிக்கதிர்கள் கிழக்கு திசை மலையின் உச்சியில் பட்டு பிரகாசிக்க தொடங்கி இருந்தது. ஆனால், அமிர்தி வனப்பகுதி அடுத்த ஆவாரன்வலசை பள்ளத்தாக்கு சூரிய வெளிச்சத்தை காண முடியாமல் இன்னுமும் பனியினுள் சூழ்ந்து இருந்தது. மெல்ல