பனங்கள் தொன்மை பகுதி 2
கள்ளின் தொன்மை பனை மரங்களிலிருந்து இறக்கிய கள்ளைச் சேகரித்து ஒரே இடத்தில் விற்கும் முறை தமிழகத்தில் பழமையான ஒன்றாகும். சங்க நூல்களுள் ஒன்றான மதுரைக்காஞ்சி மதுரை நகரின் அங்காடித் தெருக்களை வருணிக்கும் போது கள் விற்கும் கடையையும் வருணிக்கிறது. கள் விற்கும் கடை என்பதை அடையாளம் காட்டும் வகையில் கடையின் மீது கொடிகள் பறந்து கொண்டிருந்ததை, 'கள்ளின் களிநவில் கொடியொடு' (372) என்று குறிப்பிடுகிறது பதிற்றுப்பத்திலும் (58:9-11) 'கள் கொடி நுடங்கும் (அசையும்) ஆவணம் புக்கு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது (ஆவணம் என்றால் கடைத்தெரு). இங்கு கள் குடிப்போர் காரம் மிகுந்த இஞ்சி அல்லது புளிச்சுவை கொண்ட பழங்களைத் தொடுகறிபோல் பயன்படுத்தியுள்ளனர். கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், தான் நடத்திய போரில் வெற்றி பெற்றதும், கூத்தர்களுக்குக் கொடையாகக் கள் நிரம்பிய குடங்களை வழங்கினான். இச்செய்தியை, பரணர் என்ற கவிஞர் (பதிற்றுப்பத்து 42:10 -13) இஞ்சிவி விராய பைந்தார் பூட்டிச் சாந்து புறத்து எறிந்த தகம்பு துளங்கு தீம் சேறு விளைந்த மணிநிற மட்டம் ஓம்பா ஈகையின் வண்மகிழ் சுரந்த என்று வருணித்துக் கூறுகி