சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3
எங்க ஊர் ஆரணியில் இருந்து ஆற்காடு செல்லும் சாலையில் 4km தொலைவில் பூண்டி எனும் சிறிய கிராமத்தில் சமண கோவில் இருப்பதை ஏற்கனவே நாம் கூறியிருந்த #சமணமும்_தமிழும் என்ற புத்தகத்தின் மூலமும் சில நண்பர்கள் மூலமும் தெரிந்துகொண்டோம். சமண தேடலில் கடந்த பயணங்களின் தொடர்ச்சியாக இந்த வாரம் அவ்விடத்தை பார்க்க செல்வோம் என பங்காளி மதன் கூறியிருந்தேன். காலையில் மிக தாமதமாகவே கிளம்ப முடிந்தது, கடுமையான வெயில் ஆனாலும் அங்கு சென்று பார்த்துவிட வேணும் என்ற எண்ணம் திடமாக இருந்தது, ஊரில் இருந்து 15நிமிட பயண தூரத்தில் தான் அவ்விடம் இருக்கிறது ஆனால் இதுநாள் வரை அங்கு சென்று பார்த்தது இல்லை. சோழ கட்டிடகலையின் நுட்பதோடு அழகாக இருந்தது பொன்னெழில் நாதர், பாசுவநாதர் கோவில். கோவிலுக்குள் மிக நேர்த்தியாக பாசுவநாதர், ஆதிநாதர் (ரிஷபதேவர்), நவதேவதா, சந்திரபிரபு, தர்மதேவி சிலைகள் மேலும் ஒரே கல்லில் அமைய பெற்ற 24தீர்த்தங்கர்களின் உருவங்கள் என அனைத்தும் நேர்த்தியாக இருந்தது. பொன்னெழில் நாதர் என்று கருவறையில் உள்ள ஆதிநாதர் அழைக்கப்படுகிறார். மகாவீரர் முக்குடையின் கீழ் அ