Posts

அகத்திய மலைப்பயணம் - இரண்டாம் நாள் - மலையேற்றம் - பகுதி 2

Image
#கானகனின்_கான் #மேற்கு_தொடர்ச்சி_மலை #அகத்தியர்மலை #அதிருமலை #அகத்தியர்கூடம்  அடர்ந்த கானகம் - வானில் பறந்த அருவி - காட்டு ஓடைகள் - சவாலான மலையேற்றம் - நீண்ட புல்வெளிக்காடு - - மழைக்காடு - அகத்தியர்கூடம் தங்கும் முகாம்      அருவியில் குளித்து முடித்து உணவு அருந்தியது உடலுக்கு தெம்பைக் கொடுக்க, அடுத்தடுத்த மலைகளை நாங்கள் விரைவாக கடந்தோம். ஆனாலும் தொடர்ந்து வந்த ஏற்ற, இறக்கங்கள் மீண்டும் மூச்சிரைக்க செய்தன.      நாங்கள் அருவியில் உணவு சாப்பிடும் போதே மணி மதியம் 2-ஐ கடந்திருந்தது. உடன் வந்த வழிகாட்டிகள் சீக்கரம் கிளம்புங்க நாம இருட்டுவதற்குள் முகாமுக்கு போக வேண்டும் என சொல்லிக் கொண்டே இருந்தனர். குறிப்பாக எங்களின் மலையேற்றக் குழுவில் ஆண், பெண் என பலரும் முதல் முறையாக மலையேற்றத்திற்கு வந்திருந்திருந்தனர். ஆனாலும் அவர்களில் பலர் பொறுமையாகவும், உற்சாகமாகவும் மலையேறிக் கொண்டிருந்தனர்.      ஒவ்வொரு முறை காட்டு ஓடைகளின் சத்தம் கேட்கும் போதும், மலைப்பாதை கீழிறங்கி மீண்டும் மேடேறிச் ஏறிச்சென்றது. ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து சிறிதும், பெரிதுமான ஏராளமான ஓடைகளை கடக்க வேண்டியிருந்தது. சிற

அகத்திய மலைப்பயணம் - இரண்டாம் நாள் - மலையேற்றம் - பாகம் 1

Image
#கானகனின்_கான் #மேற்கு_தொடர்ச்சி_மலை #அகத்தியர்மலை #அதிருமலை #அகத்தியர்கூடம் விதுரா - போனக்காடு மலை கிராமம் - கான்துறையின் சோதனைச்சாவடி - மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடு - காட்டு அருவிகள் - மலையேற்றம் - அருவிக்குளியல்      அகத்தியர் கூடம் செல்ல அனுமதி வாங்கியிருந்தாலும் போனக்காடு மலை கிராமத்தில் உள்ள கான்துறையின் சோதனைச்சாவடியில் நம்மையும், நாம் கொண்டுச் செல்லும் பையையும் முழுவதுமாக பரிசோதித்த பின்னரே காட்டிற்குள் அனுமதிக்கின்றனர். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நெகிழிகள் எடுத்து செல்லக்கூடாது என்பதற்காக இந்த கடுமையாக நடைமுறை என நாம் நினைத்தால் அது உண்மையல்ல. (இது பற்றி அடுத்த பதிவில் விரிவாக சொல்கிறேன்)      திருவனந்தபுரத்தில் இருந்து போனக்காடுக்கு செல்லும் நேர் பேருந்து விதுரா வழியாக தான் போகும். விதுராவில் அதிகாலை 5.30க்கு வரும் அந்த பேருந்திற்காக நாங்கள் அனைவரும் முன்னமே வந்து காத்திருந்தோம். ஏனெனில் அந்த பேருந்தை விட்டால் அடுத்த பேருந்திற்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டும்.      எனவே முந்தைய நாள் இரவே மலையேற்றத்திற்கும், அங்குள்ள முகாமில் தங்குவதற்கு

அகத்திய மலைப்பயணம் - முதல் நாள்

Image
#கானகனின்_கான் #மேற்கு_தொடர்ச்சி_மலை #அகத்தியமலை #அதிருமலை #அகத்தியர்கூடம்      சென்னை - திருவனந்தபுரம் - விதுரா - தவயக்கல் அருவி      காடு, மலை என பயணப்பட தொடங்கிய காலம் முதல் என் வாழ்வில் ஒரு முறையேனும் செல்ல வேண்டும் என நினைத்திருந்த மலையேற்றம்.       தமிழக எல்லைக்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகி, தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான உயிர்களை வளமாக்கி, தமிழக கடல் பகுதியிலேயே சென்று சேரும் ஒரே வற்றாத உயிர் ஆறான தாமிரபரணியின் பிறப்பிடமான அகத்திய மலைக்கு சென்ற இப்பயணத்தில் பல்வேறு சவால்களையும், சாகசங்களையும், வலிகளையும் மகிழ்வையும் பெற்றேன். பெருமையாக அனைத்தையும் அசைப்போட முயல்கிறேன்.      அகத்திய மலை போறதுக்கான பயணத்திட்டம் தயாராகிட்டு நீயும் வரையா மச்சி, என தோழி புவனா கேட்டு இருந்தாள். அப்பயணத்திற்காகவே காத்திருந்த எனக்கு அவள் கேட்டதும் எந்த மறுப்பும் இன்றி உடனே சரி என்றேன்.      அகத்திய மலைக்கு தமிழகத்தின் பாபநாசம் மலைப்பகுதி வழியே செல்லும் காட்டுப்பாதையை, களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் வந்த பிறகு தமிழக கான்துறையினர் மூடிவிட்டனர். அதன் பிறகு அவ்வழியில

மஞ்சு மலை காட்டுப்பயணம்

Image
#காவிரி_வடக்கு_வனஉயிரின #சரணாலயம் #கிழக்கு_தொடர்ச்சி_மலை #கானகனின்_கான்      கடந்த ஆண்டு சத்தியமங்கலம் குன்றி மலையில் இருந்து அடர்ந்த காட்டின் ஊடாக பயணித்து மாதேஸ்வரன் மலைக்கு சென்ற போது ஏற்பட்ட அதே திகில் நிறைந்த பயண அனுபவம் இம்முறை மஞ்சு மலைக்கு சென்ற போதும் நிகழ்ந்தது.      பிறந்த நாளின் நினைவாக எப்போதும் நமக்கு நெருக்கமாக இருக்கும் காடு, மலைக்கு பயணம் செல்லலாம் என ஏற்கனவே முடிவு செய்திருந்தேன்.      அதன்படி தேன்கனிக்கோட்டைக்கு அருகில் இருக்கும் அய்யூர் வனப்பகுதிக்குள் (காவிரி வடக்கு வன உயிரின சரணாலயம்) உள்ள தொழுவப்பெட்டா மலைக்கு செல்வது என்றும் பின் அங்கிருந்து ஏற்கனவே போக நினைத்த பெட்டமுகிலாம் சென்று பின் இறுதியாக பஞ்சபள்ளி அணையை பார்த்துவிட்டு வீடு திரும்பலாம் என்பது தான் பிறந்த நாளுக்கான பயண திட்டமாக இருந்தது.      ஆனால், நாம் திட்டமிடாத பயணங்களே நமக்கான நிறைவான நினைவுகளை கொடுத்துவிடுகின்றன.      அய்யூர் வனத்திற்குள் தனித்து இருக்கும் தொழுவப்பெட்டா மலை கிராமத்திற்கு செல்வதகான வழியை வழக்கம் போல் Google Map-ல் பார்த்த போது, அடர்ந்த காடுகளை, மலைகளை தாண்டி மஞ்சமலை என்ற ம

நுரோந்துசாமி மலைப்பயணம்

Image
#காவிரி_வடக்கு_வனஉயிரின #சரணாலயம் #கிழக்கு_தொடர்ச்சி_மலை #கானகனின்_கான் #யானைக்காடு ஜவலகிரி வனப்பகுதி  - நடுகல் - இளநீர் கோயில் - நுரோந்துசாமி மலை மடம்       மஞ்சிமலை காட்டுப் பயணத்திற்கு பிறகு, காவிரியின் வடக்கு வன உயிரின சரணாயலத்தின் மலைப்பகுதிகளில் இருக்கும் தனித்த மலை கிராமங்கள் குறித்து வழக்கம் போல் Google Satellite Map-ல் தேட ஆரம்பித்தேன். அப்போது ஓசூர், தளி அடுத்த ஜவலகிரி வனப்பகுதியின் மலைகளில் நிறைய சிறிய சிறிய மலை கிராமங்கள் இருப்பதை பார்த்தேன்.      ஜவலகிரியில் இருந்து இன்னும் தொலைவில் உள்ள மலை கிராமங்களை தேடிப்பார்த்த போது, ஜவலகிரி காட்டுப்பகுதியில் இருந்து தெற்கே 50கி.மீ தொலைவில் நுரோந்து சாமி மலை என்ற மலை கிராமம் தனித்து இருப்பது தெரிந்தது. கிராமத்தின் பெயரே வித்தியாசமாக இருப்பதால் நிச்சயம் அங்கு சென்று பார்த்துவிட வேண்டும் என முடிவு செய்திருந்தேன்.      ஓசூரில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (17.11.23) காலை நுரோந்து சாமி மலைக்கான பயணம் ஆரம்பமானது. மிதமான வெயிலும், வானம் ஓரளவு கறுத்தும் இருந்தன. தளி பகுதியை கடந்து ஜவலகிரி வரும் வரை சாலையோரங்களில் ஏராளமான பனை மரங்க

கிளை(த்த)ப்பனை, பண்ணந்தூர்

Image
     பல பேர் பதிவுகளிலும், பல முறை செய்திகளில் இப்பனைகளை பார்த்திருந்தாலும், இப்போது தான் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.      நூற்றாண்டு வரலாறு கொண்டுள்ள இப்பனைகள், இன்று இறையின் வடிவாக மக்களால் பூசிக்கப்படுகிறது. இப்பனைகளின் காய்ந்த மட்டைகளும் கூட மக்கள் தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளாமல் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு உணவு சமைக்க எரிபொருளாக மட்டுமே பயன்படுத்துகின்றனர்.      முதிர்ந்த இரண்டு கிளைப்பனைகள் ஓரிடத்திலும், அதற்கு எதிரே ஓரளவு இளம் இரண்டு கிளைப் பனைகளையும் நாம் காண முடிகிறது. இயல்பான பனை மரங்களில் இருப்பதை விட இவற்றில் ஓலையும், மட்டையும், கருக்குகளும் கூட சற்று வித்தியாசமாக இருக்கிறது.      ஓலைகள், மட்டைகள் இயல்பை விட அளவில் சிறிதாகவும் மட்டைகளின் கருக்குகள் இயல்பை விட பெரியதாகவும் இருக்கிறது.      இதற்கு முன்னர், வேலூர் மாவட்டத்தின் செதுவலை கிராமத்தில் பார்த்த ஆறு கிளைகள் கொண்ட பனையும், திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணி - வந்தவாசி சாலையில் ஆவணியாபுரம் அருகில்  பார்த்த நான்கு கிளைகள் கொண்ட பனைகளின் பனங்காயும், பனபழமும் இயல்பான பனையை போலத்தான் இர

கொழுக்குமலை - மூணார் பயணம் - பகுதி 3

Image
சூரியநெல்லி - கற்திட்டை -  கொளுக்குமலை - ஆனையிறங்கி - போடிமெட்டு - தேனி - திண்டுக்கல்      உயர்ந்த மலையின் சரிவில், சுற்றிலும் நீண்ட பள்ளத்தாக்கு நிறைந்த இடத்தில் தான் இரவு தூங்கியிருக்கிறோம்.      காலையில் கூடாரத்தில் இருத்து எழுந்து வெளியே வந்து பார்த்த போது எதிரே தூரத்தில் தொடர்ச்சியான மலை முகடுகளும், ஆங்காங்கே சில மலை கிராமங்களும், அம்மலை கிராமங்களை இடைவிடாது மோதிச்செல்லும் மேகங்களும், இருமலைகளுக்கும் இடையே நீண்ட பள்ளத்தாக்கும் என பார்க்கும் காட்சிகாள் யாவும் பிரம்மிக்க வைத்தது.      ஓரளவு பாதுகாப்பாக மலைச்சரிவில் சற்றே கீழ் இறங்கி பார்த்த போது அருகே இருந்த புல்வெளிகள் மட்டுமே நிரம்பி இருந்த மற்றோரு மலையையும் பார்க்க முடிந்தது. அங்கிருந்து இவ்விடத்தை சுற்றி பார்க்கலாம் என அங்கே கிளம்பினோம்.      தங்குமிடத்தில் காலையில் கொடுத்த சூடான தேனீரை குடித்துவிட்டு விரைவாக அந்த புல்வெளி மலையை நோக்கி நடக்க தொடங்கினோம். 10 நிமிட நடையிலேயே அவ்விடம் வந்து விட்டது.      அம்மலைக்கு செல்லும் வழியில் சாலையோரம் பெரும் பாறைகளை அடுக்கி வைக்கப்பட்ட ஒரு கூடாரமும், அதன் எதிரே இரும்ப