Posts

Showing posts from 2020

ஜவ்வாது மலை கானுலா - 7

Image
ஜவ்வாதுமலைக் காட்டுப் பயணம்       பயணம் செல்வது அதுவும் காடுகளுக்குள் பயணமாவது போன்ற அதீத மன கிளர்ச்சியை வேற எது கொடுத்திடும் என்பதை பற்றி நான் சிந்திப்பது கூட கிடையாது, காடுகள் அழைக்கின்றன நான் உள் செல்கிறேன், அதனோடு உரையாடுகிறேன் இதுவே இந்த பிணைப்பு போதுமானதாக இருக்கிறது.      ஜவ்வாது மலையில் பார்த்திடாத, அறிந்திடாத மர்மங்கள் இன்னும் எவ்வளவு இருக்கோ என்ற கேள்வி தான் இந்த பயணத்திலும் என்னுள் கேட்டது.       ஞாயிறு அன்று பனிமூட்டதினோடு பயணித்து காலை 7க்குள் பங்காளி மதன் உடன் பனையேறி ராஜிவ் காந்தி அண்ணா ஊருக்கு சென்று அவரை சந்தித்தோம், அப்போது இந்த பருவத்தில் தான் இறக்கிய முதல் பனம்பாலை எடுத்து கொடுத்தார், அதை பருகிய பின் பனையில் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து நெடுநேரம் உரையாடிவிட்டு அங்கிருந்து கிளம்பி, சென்ற வாரமே போக வேண்டும் என திட்டமிட்டு இருந்த ஜவ்வாது மலையின் கிழக்கு எல்லைப்புற மலை கிராமமான கனமழை ஊராட்சி நோக்கி பயணமானோம்.      சென்ற வாரம் போகும் போது அந்த மலையின் அடிவாரம் வரை தான் செல்ல முடிந்தது, அப்போது புயல் காரணமாக பெய்த கடுமையான மழையால் மலைப்பாதை முழ

ஜவ்வாதுமலை கானுலா - 6

Image
ஜவ்வாது மலைக்காட்டு பயணம்      தூவான பொழுதில் ஜவ்வாது மலையின் மடியில் தவழந்த அற்புத தருணம்.      புயல் மழையால் கடந்த இரு வாரமாக ஜவ்வாது மலைக்கு செல்ல முடியாமல் தவித்து கொண்டிருந்த நேரத்தில், எங்களுக்காகவே வானம் மேகங்கக் கூட்டங்களை சற்று களைத்து விட்டது போலும். மழை எந்நேரமும் வந்துவிடும் என்பதால் அருகில் உள்ள காட்டுக்கு போவோம், தூரமாக செல்ல வேண்டாம் என பங்காளி மதன் சொன்னான் அதனால் ஆரணியில் இருந்து 15கி.மீ மேற்கில் ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் இருக்கும் படைவீடு பகுதிக்கு  செல்வதாக முடிவு செய்தோம்.      இந்த புயலில் கிடைத்த பெருமழையால் காட்டாற்று வெள்ளமும் அதனால் ஏரிகள், குளங்கள் ஒவ்வொரு ஊரும் நீரால் நிரம்பி வழிந்தது, முதலில் கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் பகுதியில் உள்ள ஏரியின் உபரி நீர் பல மதகுகளை கடந்து வெளியே ஓடிவருவது பார்க்க ரம்மியமாக இருப்பதால் அந்த பகுதியே சிறிய சுற்றுலா தலம் போல் மாறியிருந்ததை செய்திகளில் பார்த்து பின் முதலில் அங்கு சென்று பிறகு அங்கிருந்து படைவீடு செல்வோம் என முடிவு செய்தோம், ஏரி நீரில் ஆட்டம் போட்டு விட்டு கிளம்பும் போது அமிர்தி காட்டுபகுதி அருகில் தா

ஜவ்வாது மலை கானுலா - 5

Image
#குள்ளர்_குகை (megalithic site)      ஜவ்வாது மலை பல ஆச்சரிய, அதிசயங்கள் நிறைந்த இடம், மலையேற்றத்திற்கும், மலை பயணத்திற்க்கும் ஏதுவான இடம், எந்த வித தொந்தரவும் இல்லாமல் இயற்கையை மட்டும் ரசிக்க விரும்பும் உள்ளங்களுக்கு ஏற்ற இடம். இந்த மலைக்கு கிழக்கே 30-40 கி.மீ தூரத்தில் தான் எங்கள் ஊர் (ஆரணி) உள்ளது, எனவே தான் இந்த கொரோனா காலத்தில் நேரம் கிடைக்கும் போது எல்லாம் மலைக்கு போக முடிந்தது, ஆனால் ஒவ்வொரு முறை இந்த மலைக்கு போகிற போது பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டு பார்க்க முடியாமல் இருந்த இடம் தான் கீழ்சிப்பிலியில் இருக்கும் குள்ளர் குகைகள், ஆனால் எப்படியும் இந்த முறை பயணத்தில் குள்ளர் குகையை பார்த்தே தீர வேணும் என்ற வேட்கையோடு பங்காளி மதன் உடன் காலை 8.30ணிக்கு ஊரில் இருந்து கிளம்பினோம். குள்ளர் குகை:-      2300 - 2500 ஆண்டுக்கு முன் பெருங்கற்காலத்தில் (megalithic period) வாழ்ந்த குள்ள மனிதர்களால் கட்டப்பட்டதாகவும், முன்பு மலைகளில் வாழ்ந்த பழங்குடி மக்கள் இறந்த தம் முன்னோர்களை அடக்கம் செய்ய அமைக்கப்பட்ட ஈமச் சின்னம் என்றும் வரலாற்று ஆய்வாளார்களால் சொல்லப்படகிற சிறிய அளவிளான

ஜவ்வாது மலை கானுலா - 4

Image
ஜவ்வாது மலை காட்டுப்பயணம் வித் தம்பி    அன்பு நிறைந்த உள்ளங்களையே காடுகள் எப்போதும் தன்னுள் அணைத்துக் கொள்கிறது. அப்படி காடுகளோடு தன்னையும்  இணைத்துக் கொள்ள தம்பி சந்தோசு சென்னையில் இருந்து நீண்ட தூரம் பயணித்து சனிக் கிழமை காலை 25.10.20 ஆரணி வந்து சேர்ந்தான்.      முதலில் அவனை கூட்டிக் கொண்டு சவ்வாது மலை தொடரில் உள்ள படைவீடு அடுத்த கோட்டைமலைக்கு செல்வதாக தான் திட்டம் இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பெய்யும் கடும் மழையால் மலை பாதை சேதாராம் ஆகியிருக்கும் எனவே வாகனத்தில் அங்கு செல்ல இயலாது. அதனால் போளூர் வழியாக சவ்வாதுமலையில் ஏறுவது என்று முடிவு செய்து கிளம்பினோம். தம்பி புதிதாக ஊருக்கு வந்ததால் வழியில் பார்த்த சிறுசிறு குன்றுகள், குட்டிக் காடுகள், ஆள் இல்லாத நெடுஞ்சாலை, கருமேக நிழல் சூழ்ந்த வயல்வெளிகள் என அவன் பார்த்த அனைத்தும் அவன் உள்ளங்களை கவர தவறவில்லை, சென்னை வாசியான அவனுக்கு வழியில் சாப்பிட்ட 10ரூபாய் இளநீர் கூட ஆச்சரியத்தையே கொடுத்து இருந்தது.    ஒரு வாரமாக பெய்யும் மழையால் ஜவ்வாதுமலை எங்கும் பச்சை போர்த்தியது போன்று புற்கள் நீண்டு இருந்தது. அதிக உயரம் இல்லாத மல

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 3

Image
      எங்க ஊர் ஆரணியில் இருந்து ஆற்காடு செல்லும் சாலையில் 4km தொலைவில் பூண்டி எனும் சிறிய கிராமத்தில் சமண கோவில் இருப்பதை ஏற்கனவே நாம் கூறியிருந்த #சமணமும்_தமிழும் என்ற புத்தகத்தின் மூலமும் சில நண்பர்கள் மூலமும் தெரிந்துகொண்டோம். சமண தேடலில் கடந்த பயணங்களின் தொடர்ச்சியாக இந்த வாரம் அவ்விடத்தை பார்க்க செல்வோம் என பங்காளி மதன் கூறியிருந்தேன்.           காலையில் மிக தாமதமாகவே கிளம்ப முடிந்தது, கடுமையான வெயில் ஆனாலும் அங்கு சென்று பார்த்துவிட வேணும் என்ற எண்ணம் திடமாக இருந்தது, ஊரில் இருந்து 15நிமிட பயண தூரத்தில் தான் அவ்விடம் இருக்கிறது ஆனால் இதுநாள் வரை அங்கு சென்று பார்த்தது இல்லை.       சோழ கட்டிடகலையின் நுட்பதோடு அழகாக இருந்தது பொன்னெழில் நாதர், பாசுவநாதர் கோவில். கோவிலுக்குள் மிக நேர்த்தியாக பாசுவநாதர், ஆதிநாதர் (ரிஷபதேவர்), நவதேவதா, சந்திரபிரபு, தர்மதேவி சிலைகள் மேலும் ஒரே கல்லில் அமைய பெற்ற 24தீர்த்தங்கர்களின் உருவங்கள் என அனைத்தும் நேர்த்தியாக இருந்தது.           பொன்னெழில் நாதர் என்று கருவறையில் உள்ள ஆதிநாதர் அழைக்கப்படுகிறார். மகாவீரர் முக்குடையின் கீழ் அ

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 2

Image
            சமீபத்தில் மயிலை. சீனி. வேங்கடசாமி எழுதிய #சமணமும்_தமிழும் புத்தகத்தை படித்திருந்தேன், அதில் வடாற்காடு பகுதியில் இருந்த சமணர்கள் பற்றியும் அவர்கள் வாழ்ந்த இடங்களை பற்றியும் சொல்லியிருந்தார்.         குறிப்பாக எங்கள் ஊர் ஆரணிக்கு அருகில் பல சமண கோவில்களும், கல்வெட்டுகளும், குகைகளும் இருப்பது தெரிந்தது. நம்ம ஊர் பக்கத்திலேயே இவ்வளவு வரலாற்று தொன்மையான இடங்கள் இருப்பதை படித்த பின் இயல்பாக அவற்றை பார்க்க வேண்டும் என்ற ஆர்வும் தோற்றிக் கொண்டது. பங்காளி மதன் சில வாரங்களாக இதை பற்றியே கேட்டுட்டு இருந்தான் கடைசியில் கிளம்பியாச்சி.        ஆரணியில் இருந்து கண்ணமங்கலம் வழியாக ஆற்காடு செல்லும் சாலையில் 20கி.மீ தொலைவில் உள்ளது பஞ்சபாண்டவ மலை என்னும் திருப்பான் மலை சமண குகை கோவில்.       ஆற்காடு சாலையின் அருகிலேயே ஒரு பெரிய பாறை அதன் அடியில் சமண குகைகள் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது.  சாலையில் வண்டியை நிறுத்திவிட்டு அருகில் இருந்த கடையில் சர்பத் வாங்கி குடித்துக் கொண்டே கடைக்காரிடம் மலையை பற்றிய சில தகவல்களை கேட்டறிந்தோம். உள் நுழைந்தது நீர் நிரம்பிய தாமரை அல்லி

பனையேறி சுந்தரம் - சிறுகதை

Image
          வடாற்காடு மாவட்டத்தில் ஓரளவு நீர் வளம் கொண்ட எங்கள் பகுதியில் கைத்தறி நெசவும், விவசாயமும் தான் பிரதான  தொழில்கள். சிறு வயதில் இருந்தே வீட்டில் அப்பாவுடன் தறி வேலைக்கும், விவசாய வேலைக்கும் செல்வது வழக்கம். வீட்டில் இருந்து சரியாக ஒன்றரை கிலோ மீட்டருக்கும் கொஞ்சம் அதிகமான தூரத்தில் எங்கள் கழனி உள்ளது. அறுவடை நேரங்களில் அப்பா கழனியிலேயேத்  தங்கிவிடுவார், நான் தான் அவருக்கு மாலையில் சாப்பாடு கொண்டு போவேன்.     ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் எங்கள் கழனி இருப்பதால் கிணற்றில் எப்போதும் நீர் இருக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகப்  பொய்த்துப்போனப் பருவ மழையால் ஏரி வெடிப்புற்றுக் காய்ந்துபோய் இருந்தது. ஆங்காங்கே மழைநீர் சேகரிப்புக்காக 100 நாள் வேலை திட்டம் மூலம் பெண்களால் குறுக்கும், நெடுக்குமாகப்  பள்ளங்கள் வெட்டப்பட்டு இருந்தன. அந்தப் பள்ளங்களுக்கு இடையில் என் மிதிவண்டி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.     எந்நேரம் ஆனாலும் ஏரிக்கரைகளில் இருக்கும் வானுயர்ந்த நெடும் பனைகளைப்  பார்க்காமல் நான் போனது இல்லை. ஐந்து கிலோமீட்டருக்கும் மேல் நீளமுள்ள ஏரியின் இரு கரைகளையும் அந்தப்

சமண தொன்மங்கள் தேடல் பயணம் 1

Image
      சமணர்கள் வாழ்ந்த தொல் எச்சங்கள் தமிழகம் முழுவதும் நாம் பரவலாக காணலாம், குறிப்பாக எங்கள் மாவட்டத்தில் ஆரணி - திருவண்ணாமலை சாலையில் 15கிமீ தொலைவில் திருமலை என்ற ஊரில் இருக்கும் சமண கற்படுக்கைகள் (நேமிநாதர் ஆலயம்) மிக பழமையானது. இது போன்று எங்க மாவட்டத்தில் வேறு சில ஊர்களிலும் சமண கற்படுக்கைகள் இருக்கின்றன.      ஆனால் பெரிதும் வெளியில் தெரியாத யாரும் எளிதில் அணுகாமல் இருந்த சமணர் கற்படுக்கைகள் எங்கள் ஊரின் அருகில் இருப்பதாக  சமீபத்தில் தோழி பேசும் போது சொல்லி இருந்தாள், ஆனால் அந்த இடம் பற்றிய சரியான குறிப்பு அவளிடம் இல்லை, ஊர் பெயரை மட்டும் தெரிந்தது. அவள் சொன்ன அந்த ஊருக்கு கடந்த வாரம் என் நண்பருடன் போய்ருந்தேன், அவருக்கு ஏற்கனவே இது பற்றி தெரியும் ஆனால் அவருக்கும் அந்த இடத்தின் வழி தெரியாது, அந்த ஊரின் மக்களும் கூட முன்னுக்கு பின் முரணான தகவலே கூறினர். அதனால் கடந்த வாரம் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினோம்.       இம்முறை எப்படி ஆயினும் அந்த சமண குகை, கற்படுக்கைகளை பார்த்து விட வேண்டும் என்ற வேட்கையில் நானும் என் பயண தோழன் பங்காளி மதன் கிளம்பினோம். கடந்த வாரம்

மறுபிறவி எடுத்த அபூர்வ பனை

Image
      பனை குறித்த தொடர் பயணங்களில் நாம் பல்வேறு வித்தியாசமான பனைகளை பார்த்து கொண்டு வருகிறோம், அதன்படி கடந்த வாரம் கிளைப்பனை பற்றி பதிவு செய்து இருந்தோம். அதை பார்த்த அநேக நண்பர்கள் தமிழ் பெருநிலமெங்கும் உள்ள கிளைப்பனைகளை பற்றி செய்திகளை அனுப்பி இருந்தனர், அதில் எங்கள் ஊர் நண்பர்  Ganesh கடந்த முறை படைவீடு சென்ற போது தான் பார்த்த வித்தியாசமான பனையின் புகைப்படத்தை அனுப்பியிருந்தார்.      இதுவரை அப்படியான பனையை நான் எங்கும் பார்த்தது இல்லை, அவர் புகைப்படம் அனுப்பிய நாளில் இருந்தே அதை நேரில் சென்று பார்க்க வேணும் என்ற ஏக்கம் இருந்தது. அதிலும் அப்பனை இருக்கும் இடம் நாங்கள் முந்திய பயணங்களை மேற்கொண்ட அதே படைவீடு, சவ்வாதுமலை பகுதிக்கு அருகில் தான். எனவே ஞாயிறு காலையில் வேறு ஒரு மலைக்கு செல்வதாக இருந்த பயண திட்டத்தை இந்த அதிசய பனையை காண போவோம் என பங்காளி மதன் கூற.. புறப்பட்டோம்.        காலை 11 மணிக்குள் அந்த அதிசய பனை இருக்கும் தஞ்சாம்பாறை (படைவீடு) மலை அடிவாரத்திற்கு சென்றிருந்தோம், அங்காங்கே சில குடிசை மற்றும் கான்ங்ரிட் வீடுகள் இருந்தது, சாலையின் ஓரம் நெல் வயல் வரப்பின் மீது வல

அதிசய கிளைப்பனை - பனை பயணம்

Image
அதிசய கிளை பனை        ஐயா பண்ருட்டி பஞ்சவர்ணம் எழுதிய  #பனைமரம் புத்தகத்தில் ஏழுகிளைகள் கொண்ட பனையை ஆவணப்படுத்தி இருந்தார், அவரின் முகநூல் பதிலும் அது பற்றி பதிவிட்டு இருந்தாங்க. அதை பார்த்ததில் இருந்து அந்த இடத்திற்கு போக வேண்டும் என்ற ஆசை இருந்தது, மேலும் அந்த இடம் எங்க ஊரில் இருந்து 50km பயண தூரத்தில் தான் இருக்கு, ஆனால் பணிச் சூழலில் பல காலம் அங்கு போக முடியாமல் இருந்தது.        இந்த கொரானா ஊரடங்கு நமக்கு நிறைய உபரி நேரங்களை கொடுத்தது. இந்த ஓய்வு நேரத்தில் வார இறுதி நாட்களில் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள சவ்வாது மலை காட்டுக்கும், அங்குள்ள பழங்குடிகளின் கிராமத்திற்கும் கடந்த வாரங்களில் சென்று பார்த்துதோம். அடுத்து நான் #பனைமரம் புத்தகத்தில் பார்த்த அந்த ஏழு கிளை கொண்ட பனையை பார்க்க போகனுன்னு எப்போதும் போல் பங்காளி மதன் கிட்ட வெள்ளி இரவு 10.30மணிக்கு மேல் தான் சொன்னேன், ஆனா அடுத்த நாள் காலையே (11.07.20) கிளம்பிட்டோம்.           காலை 11மணிக்கே அந்த ஊருக்கு போய் சேர்ந்துட்டோம், பிறகு அங்கு ஆட்டோ ஓட்டும் அண்ணன்களிடம் இந்த கிளை பனையின் புகைப்படம் காட்டி எங்க இருக்குன்னு விசாரி

ஜவ்வாது மலை கானுலா - 3

Image
05.07.2020 கோட்டைமலை காடு, படைவீடு மீண்டும் காட்டுக்குள்      சில வாரங்களுக்கு முன், நான் சின்ன வயசுல ஒரு மலை கோவிலுக்கு மேல இருந்து  பார்த்த பள்ளத்தாக்கு கிராமத்துக்கு போனத பத்தி பதிவு போட்டு இருந்தேன், (முந்தைய பதிவை பார்த்தவர்களுக்கு நினைவிருக்கலாம். பதிவு லிங்க் முதல் கமெண்டில் இருக்கு ) அந்த பதிவில் பலர் எங்களையும் அங்க கூட்டிட்டு போங்க நாங்களும் அந்த மலைக்கு மேல இருந்த அந்த காட்டின் அழகையும்,  அந்த பள்ளத்தாக்கு இருக்குற குட்டி மலை கிராமத்தையும் பார்க்கனும்ன்னு கேட்டு இருந்தாங்க.      அந்த அன்பு உள்ளங்களுக்காக மீண்டும் காட்டுக்குள் பயணம். சின்ன வயசுல எங்க இருந்து அந்த பள்ளாத்தாக்கு மலை கிராமத்தை நான் பார்த்தனோ, மீண்டும் அதே இடத்தில் இருந்து இந்த காட்டின் மொத்த அழகையும் ரசிப்போம் வாங்க.        எங்க ஊருல இருந்து ஊச்சி மலை வரைக்கும் 35கிலோ மீட்டர்க்கும் கொஞ்சம் அதிகமா இருக்கும், ஆனா எங்க ஊருல எந்த இடத்துல இருந்து பார்த்தாலும் அந்த மலை கோவில் நல்லா தெரியும். புரட்டாசி மாசத்துல கோவில் இருக்கும் மூணாவது மலையில மட்டும் சீரியல் லைட் கட்டுவாங்க, அத ராத்திரியில பார்க்கும் போது க