ஜவ்வாது மலை கானுலா - 7
ஜவ்வாதுமலைக் காட்டுப் பயணம் பயணம் செல்வது அதுவும் காடுகளுக்குள் பயணமாவது போன்ற அதீத மன கிளர்ச்சியை வேற எது கொடுத்திடும் என்பதை பற்றி நான் சிந்திப்பது கூட கிடையாது, காடுகள் அழைக்கின்றன நான் உள் செல்கிறேன், அதனோடு உரையாடுகிறேன் இதுவே இந்த பிணைப்பு போதுமானதாக இருக்கிறது. ஜவ்வாது மலையில் பார்த்திடாத, அறிந்திடாத மர்மங்கள் இன்னும் எவ்வளவு இருக்கோ என்ற கேள்வி தான் இந்த பயணத்திலும் என்னுள் கேட்டது. ஞாயிறு அன்று பனிமூட்டதினோடு பயணித்து காலை 7க்குள் பங்காளி மதன் உடன் பனையேறி ராஜிவ் காந்தி அண்ணா ஊருக்கு சென்று அவரை சந்தித்தோம், அப்போது இந்த பருவத்தில் தான் இறக்கிய முதல் பனம்பாலை எடுத்து கொடுத்தார், அதை பருகிய பின் பனையில் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து நெடுநேரம் உரையாடிவிட்டு அங்கிருந்து கிளம்பி, சென்ற வாரமே போக வேண்டும் என திட்டமிட்டு இருந்த ஜவ்வாது மலையின் கிழக்கு எல்லைப்புற மலை கிராமமான கனமழை ஊராட்சி நோக்கி பயணமானோம். சென்ற வாரம் போகும் போது அந்த மலையின் அடிவாரம் வரை தான் செல்ல முடிந்தது, அப்போது புயல் காரணமாக பெய்த கடுமையான மழையால் மலைப்பாதை முழ