Posts

Showing posts from March, 2022

சிறகடிக்கும் சிட்டுக்கள் - சுட்டியானை

Image
     குழந்தைகளோடு பனை சார்ந்த உரையாடல்கள், நிகழ்வுகள்  என்பது எப்போதும் மனநிறைவை தரக்கூடியது தான்.       ஜவ்வாதுமலை முக்கூடல் தோட்டத்தில் கடந்த ஆண்டு சுட்டியானை, வலசை வாழ்வியல் பள்ளி முன்னேடுத்த குழந்தைகள் முகாமில் குழந்தைகளிடம் இருந்து கிடைத்த அனுபவம், தொடர்ந்து அவர்களுக்காக பனையோலையில் புதிய புதிய பொருட்களை செய்ய தூண்டியது.      இந்த ஆண்டும் ஜவ்வாதுமலை, மலைரெட்டியூரில் உள்ள முக்கூடல் தோட்டத்தில் குழந்தைகள் முகாம் நடத்த இருக்கிறோம் பனையோலை பயிற்சி கொடுக்க முடியுங்களா என பிரவின் அண்ணா கேட்டு இருந்தாங்க. எவ்வித முன் யோசனையும் இன்றி நிச்சயம் வந்துவிடுகிறேன் என்றேன்.     இணையரிடம் குழந்தைகள் நிகழ்வு இருக்கு போகனும் என்றதும் நானும் வரே கூட்டிட்டு போங்க என்றாள், என்னவளுடன் கலந்து கொள்ளும் முதல் பனை சார்ந்த நிகழ்வு என்பதால் கூடுதல் மகிழ்வோடு சென்னையில் இருந்து இரு தினத்திற்கு முன்னமே ஊருக்கு வந்து விட்டோம். நிகழ்வு அன்று (19.03.22) காலை 8 மணிக்குள் போளூர் வந்து அங்கிருந்து அத்திமூர் - ஜமுனாமரத்தூர் காட்டுப்பாதையில் பயணத்தை தொடர்ந்தோம்.      கடந்த ஆண்டும் இதே மார்ச் மா

உலக காடுகள் தினம்

Image
* காடு, மிகவும் தூய்மையான இடம் மட்டும் அல்ல; மனித இதயத்துக்கு மிக நெருக்கமான இடமும் கூட. ஒருவனுக்குள் இருக்கும் உண்மைகளை எளிதில் உதிர்க்கச் செய்யும் ஆற்றல் காட்டுக்கு உண்டு. காட்டின் ஊடே செல்லும் ஒருவனால் கபடத்தனத்தை மறைத்து பயணப்பட முடியாது. * காடு என்பது அடர்ந்த தாவர கூட்டம் மட்டும் அல்ல, அது சிறு சிறு பூச்சிகளில் இருந்து யானைகள் வரை இருக்கக்கூடிய ஒரு பெரும் பல்லுயிரிய தொழில்கூடம். * உலகில் மனித ஆக்கிரமிப்புகள் அதி வேகமாக நடக்கும் நிலம் காட்டின் நிலமாகவே இருக்கிறது.  *உலகில் மனிதர்களால்  அதிகமாக அழித்தொழிக்கப்படும் உயிரிகள் காட்டுயிரிகளாக தான் இருக்கின்றன. * உலகில் பல்லுயிர்மைக்கு பெரும் ஆதாரமாக விளங்கும் காடுகளை மனித இனத்தை தவிர எந்த ஒன்று இவ்வளவு வேகமாக அழித்தது இல்லை.  * நாம் நினைப்பதை காட்டிலும் காடு எண்ணிலடங்கா உயிராற்றலை கொண்டது, மனிதனின் அறிவை மட்டும் வைத்துக்கொண்டு காட்டை உள்வாங்குவதோ, உணர்வதோ சாத்தியம் இல்லை. * இங்கு நாம் குப்பைகளை தரம் பிரிக்க அல்லது சுத்தம் செய்ய பெரும் மனித ஆற்றலையோம், பெரும் பொருளாதாரத்தையும் செலவிட வேண்டியுள்ளது, ஆனால் காட்டில் ஒ