சிறகடிக்கும் சிட்டுக்கள் - சுட்டியானை
குழந்தைகளோடு பனை சார்ந்த உரையாடல்கள், நிகழ்வுகள் என்பது எப்போதும் மனநிறைவை தரக்கூடியது தான். ஜவ்வாதுமலை முக்கூடல் தோட்டத்தில் கடந்த ஆண்டு சுட்டியானை, வலசை வாழ்வியல் பள்ளி முன்னேடுத்த குழந்தைகள் முகாமில் குழந்தைகளிடம் இருந்து கிடைத்த அனுபவம், தொடர்ந்து அவர்களுக்காக பனையோலையில் புதிய புதிய பொருட்களை செய்ய தூண்டியது. இந்த ஆண்டும் ஜவ்வாதுமலை, மலைரெட்டியூரில் உள்ள முக்கூடல் தோட்டத்தில் குழந்தைகள் முகாம் நடத்த இருக்கிறோம் பனையோலை பயிற்சி கொடுக்க முடியுங்களா என பிரவின் அண்ணா கேட்டு இருந்தாங்க. எவ்வித முன் யோசனையும் இன்றி நிச்சயம் வந்துவிடுகிறேன் என்றேன். இணையரிடம் குழந்தைகள் நிகழ்வு இருக்கு போகனும் என்றதும் நானும் வரே கூட்டிட்டு போங்க என்றாள், என்னவளுடன் கலந்து கொள்ளும் முதல் பனை சார்ந்த நிகழ்வு என்பதால் கூடுதல் மகிழ்வோடு சென்னையில் இருந்து இரு தினத்திற்கு முன்னமே ஊருக்கு வந்து விட்டோம். நிகழ்வு அன்று (19.03.22) காலை 8 மணிக்குள் போளூர் வந்து அங்கிருந்து அத்திமூர் - ஜமுனாமரத்தூர் காட்டுப்பாதையில் பயணத்தை தொடர்ந்தோம். கடந்த ஆண்டும் இதே மார்ச் மா