பனை கனவுத் திருவிழா
பனை கனவுத் திருவிழா தமிழக வரலாற்றில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்த இருக்கும் பனை திருவிழாவில் ஒன்றுகூட வாருங்கள். உலகில் உள்ள எல்லா வகையான சமூக பண்பாட்டு படிமலர்ச்சியையும் ஒரு சிறிய நிலப்பரப்புக்குள் வைத்திருக்கும் தமிழகத்தின் சமூக பண்பாட்டு, தொடர்ச்சியின் பேர் ஆவணமாக இருக்கும் பனையை கொண்டாட ஒன்றிணைவோம். ஒரு மரம் தன்னுடைய எல்லா உறுப்புகளையும் மானுட பயன்பாட்டிற்கு கொடுக்கிறது என்றால் அது பனை மரமாக தான் இருக்கும். ஒரு பனை மரம் தன் மொத்த வாழ்நாளையும் மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவே அற்பணிக்கிறது. தமிழ் கழக காலத்திற்கு முன்பில் இருந்தே பனைசார் பொருட்கள் தமிழக மக்களிடம் புழக்கத்தில் இருந்து வந்துள்ளதை பல ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். எளிய மக்களின் அன்றாட வாழ்வியலின் அங்கமாக பனைசார் பொருட்கள் இருந்தமையால் ஏறக்குறைய எல்லா தமிழ் கழக நூல்களிலும் பனையின் உணவுகளை அதன் பாகங்களை நேரடியாகவும், உவமையாகவும் அறிஞர் பெருமக்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்த வரலாற்றின் தொடர்ச்சியாக இன்றும் தமிழக நிலமெங்கும் பனைசார் முன்னெடுப்புகள் பலராலும் முன்னெடுக்கப்பட்டு வருக