மறுபிறவி எடுத்த அபூர்வ பனை
பனை குறித்த தொடர் பயணங்களில் நாம் பல்வேறு வித்தியாசமான பனைகளை பார்த்து கொண்டு வருகிறோம், அதன்படி கடந்த வாரம் கிளைப்பனை பற்றி பதிவு செய்து இருந்தோம். அதை பார்த்த அநேக நண்பர்கள் தமிழ் பெருநிலமெங்கும் உள்ள கிளைப்பனைகளை பற்றி செய்திகளை அனுப்பி இருந்தனர், அதில் எங்கள் ஊர் நண்பர் Ganesh கடந்த முறை படைவீடு சென்ற போது தான் பார்த்த வித்தியாசமான பனையின் புகைப்படத்தை அனுப்பியிருந்தார். இதுவரை அப்படியான பனையை நான் எங்கும் பார்த்தது இல்லை, அவர் புகைப்படம் அனுப்பிய நாளில் இருந்தே அதை நேரில் சென்று பார்க்க வேணும் என்ற ஏக்கம் இருந்தது. அதிலும் அப்பனை இருக்கும் இடம் நாங்கள் முந்திய பயணங்களை மேற்கொண்ட அதே படைவீடு, சவ்வாதுமலை பகுதிக்கு அருகில் தான். எனவே ஞாயிறு காலையில் வேறு ஒரு மலைக்கு செல்வதாக இருந்த பயண திட்டத்தை இந்த அதிசய பனையை காண போவோம் என பங்காளி மதன் கூற.. புறப்பட்டோம். காலை 11 மணிக்குள் அந்த அதிசய பனை இருக்கும் தஞ்சாம்பாறை (படைவீடு) மலை அடிவாரத்திற்கு சென்றிருந்தோம், அங்காங்கே சில குடிசை மற்றும் கான்ங்ரிட் வீடுகள் இருந்தது, சாலையின் ஓரம் நெல் வயல் வரப்பின் மீது வல