கொல்லிமலை பயணம் - பகுதி 3
கொல்லிமலை பயணம் கடைசி நாள் கொல்லிமலை அருவிகள் இந்த பயணத்தில் நான் கொஞ்சமும் எதிர்பார்த்திட கொல்லிமலை சித்தர் குகைகளை பார்க்க முடிந்தது பெரும் மகிழ்வை கொடுத்தது. அடர்ந்த காட்டிற்குள், மலையேற்றத்தில் சித்தர் குகைகளை பார்த்துவிட்டு வந்த பின் இரவு கால்களில் வலியை உணர முடிந்தது. ஆனால், அந்த காட்டுபயணத்தின் நினைவுகளால் உடலின் வலிகளை மறக்கடிக்க செய்து விட்டது. கொல்லிமலை பயணத்தின் கடைசி நாளான இன்று மேலும் சில இடங்களை பார்த்துவிட வேண்டும் என காலையில் விரைவாக நாங்கள் தங்கியிருந்த மலைவீடு விடுதி அறையை காலி செய்துவிட்டு நானும் தம்பியும் கிளம்பினோம். நேற்று சித்தர் குகையை பார்த்து முடித்ததும் நண்பன் பிரபு மற்றொரு பயணத்திற்காக நேற்று இரவே கிளம்பிவிட்டான். எப்படியும் இன்று கொல்லிமலையின் முக்கிய அருவியான ஆகாய கங்கையை பார்த்து விட வேண்டும் என்பது தான் திட்டம், போகிற வழியில் சில இடங்களை பார்த்துவிட்டு போகலாம் ஆனால் நேரத்தை விரயம் செய்திடாமல் கிளம்ப வேண்டி இருந்ததால் காலை உணவை விரைந்து முடித்துக்கொண்டோம். செம்மேட்டில் இருந்து அரப்பலீஸ்வரர் கோயிலுக்கு செல்கிற பாதையில் 5கி.ம