ஜவ்வாது மலை கானுலா - 5
#குள்ளர்_குகை (megalithic site) ஜவ்வாது மலை பல ஆச்சரிய, அதிசயங்கள் நிறைந்த இடம், மலையேற்றத்திற்கும், மலை பயணத்திற்க்கும் ஏதுவான இடம், எந்த வித தொந்தரவும் இல்லாமல் இயற்கையை மட்டும் ரசிக்க விரும்பும் உள்ளங்களுக்கு ஏற்ற இடம். இந்த மலைக்கு கிழக்கே 30-40 கி.மீ தூரத்தில் தான் எங்கள் ஊர் (ஆரணி) உள்ளது, எனவே தான் இந்த கொரோனா காலத்தில் நேரம் கிடைக்கும் போது எல்லாம் மலைக்கு போக முடிந்தது, ஆனால் ஒவ்வொரு முறை இந்த மலைக்கு போகிற போது பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டு பார்க்க முடியாமல் இருந்த இடம் தான் கீழ்சிப்பிலியில் இருக்கும் குள்ளர் குகைகள், ஆனால் எப்படியும் இந்த முறை பயணத்தில் குள்ளர் குகையை பார்த்தே தீர வேணும் என்ற வேட்கையோடு பங்காளி மதன் உடன் காலை 8.30ணிக்கு ஊரில் இருந்து கிளம்பினோம். குள்ளர் குகை:- 2300 - 2500 ஆண்டுக்கு முன் பெருங்கற்காலத்தில் (megalithic period) வாழ்ந்த குள்ள மனிதர்களால் கட்டப்பட்டதாகவும், முன்பு மலைகளில் வாழ்ந்த பழங்குடி மக்கள் இறந்த தம் முன்னோர்களை அடக்கம் செய்ய அமைக்கப்பட்ட ஈமச் சின்னம் என்றும் வரலாற்று ஆய்வாளார்களால் சொல்லப்படகிற சிறிய அளவிளான