Posts

Showing posts from December, 2021

ஜவ்வாது மலை கானுலா - 8

Image
ஜவ்வாதுமலை காட்டுப்பயணம் அண்ணனோடு      நான் கொல்லிமலைக்கு பயணம் செல்லும் போதே அரிதுல் அண்ணனிடம் இருந்து அழைப்பு வந்தது, டேய் தம்பி அண்ணாக்கும் உங்கூட காட்டுக்கு போகனுன்னு ஆசையா இருக்கு கூட்டிட்டு போடான்னு சொன்னாங்க. சரிங்க அண்ணா நான் கொல்லிமலை பயணம் போய்ட்டு வந்ததும் ஜவ்வாது மலைக்கு போலாம் - ன்னு சொல்லிருந்தேன்.      அண்ணா சொந்த ஊர் தஞ்சாவூருக்கு அருகில் கல்லூரி படித்தது சென்னையில் தான் ஆனாலும் சில காலம் மலேசியாவிலும், துபாயிலும் இருந்ததால் வடமாவட்ட ஊர்கள் அவருக்கு அவ்வளவு பரிட்சயம் கிடையாது. கொல்லிமலை பயணம் முடிச்சி ஊர் திரும்பும் போதே அண்ணாவுக்கு அழைப்பு கொடுத்து திருச்சியில் இருந்து வேலூர் செல்லும் பேருந்தில் ஏறி, போளூர் வந்துருங்கவும் என சொல்லிட்டு, நானும் கொல்லிமலையில் இருந்து கிளம்பி அன்றே இரவே செங்கம் வந்து சேர்ந்தேன். அவரும் இரவு 11மணி திருச்சியில், வேலூருக்கான பேருந்தில் ஏறிவிட்டதாக சொல்லிருந்தார். 6மணி நேரம் பயணம் என்பதால் அடுத்த நாள் அதிகாலையில் வந்து சேர்ந்துடுவாங்க என்பதால் கொல்லிமலைக்கு என்னோடு வந்த தம்பியின் வீட்டில் (செங்கம்) இரவு தங்கிவிட்டேன்.

ஒடுக்கப்படும் பனையேறிகள்

Image
தமிழக அரசின் காவல் துறையால் ஒடுக்கப்படும் பனையேறிகளும், பனை தொழிலாளர்களும்       ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்ற சொல்லை மெய்ப்பிக்கும் படியான சம்பவம் தான் சமீபத்தில் எங்கள் பகுதி பனையேறிகளுக்கு நடந்துள்ளது.      வட தமிழ்நாட்டில் பனையேறிகள் மிகுதியாக இருக்கும் கிராமம். ஒவ்வொரு ஆண்டும் 'கள்' இறக்க பனையேறிகள் காவல்துறையோடு பெரும் போராட்டத்தையே நடத்த வேண்டியுள்ளது. காவல்துறையின் மிரட்டல்களை பொருட்படுத்தாமல் 'கள்' இறக்கும் பனையேறிகளின் மீது இன்று வரை விசச்சாராயம் இறக்கியதாகவே பொய் வழக்கு பதியப்படுகிறது. (தமிழகத்தின் பிற பகுதி பனையேறிகளுக்கும் இதே நிலை தான்). அரசு காவல் துறை மூலம் கடுமையான நெருக்கடிகளை கொடுத்தாலும், தங்களின் மரபு வழிப்பட்ட பனை தொழில் அவர்களால் நசுக்கப்பட்டாலும் பனையேறிகள் தத்தம் பனை சார்ந்த பணிகளை (கள் இறக்குவது உட்பட) அறத்தோடே செய்து வருகின்றனர்.       இவ்வளவு அடக்குமுறைகளுக்கு பின்னும் பறையேறிகள் மீண்டும் மீண்டும் பனைமரம் ஏறி கள் இறக்குவதாலும், பனை தொழிலை தொடர்வதாலும் இம்முறை நூதனமான முறையில் பனை மக்களை காவல் துறை ஒடுக்க ஆரம்பித்த

நானும் எங்கள் பட்டு நெசவும்

Image
           எங்கள் ஊரில் விவசாயமும், பட்டு நெசவும் தான் பிரதான தொழில்கள், அப்பா 8 வயது இருக்கும் போது கைத்தறி வேலை செய்யவும், விவசாயத்தை பார்த்துக் கொள்ளவும் ஆரம்பித்திருந்தார். தறியின் கால்குழி உயரம் கூட முழுமையாக அவருக்கு எட்டவில்லை ஆனாலும் தறி நெய்தார்(நெசவு). அப்போது தாத்தா தறி நெய்யாமல் ஊதாரியாக ஊர் சுற்றியதால், (பாட்டி சொல்லி கேட்டிருக்கிறேன்) குடும்ப பொறுப்போடு தன் இரு தம்பிகளையும் சேர்த்து வளர்க்கும் பொறுப்பும் அப்பாவிடமே வந்தது.      அவர் தறி நெய்ய தொடங்கி தற்போது வரை தன் 50 ஆண்டு கால அனுபவத்தில் ஆரணி கைத்தறி பட்டு நெசவில் பலவிதமான பரிமாணங்களை பார்த்துவிட்டார். அப்பா, அம்மாவுக்கு திருமண ஆன போதும் சில வருடங்கள் கழித்து அக்கா பிறந்த பிறகு வரை அப்பா தறி நெசவு கூலிக்கு செய்வதில் இருந்து, சேலையை சொந்தமாக உற்பத்தி செய்யும் முதலாளியாக இருந்தார்.      அக்கா பிறந்த அடுத்து வருடத்தில் அண்ணாவும் அதற்கடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து நானும் பிறந்ததில் இருந்து அப்பாவுக்கு பட்டு சேலை தொழிலிலும், விவசாயத்திலும் தோய்வு ஏற்பட்டுள்ளது. இரு தொழில்கள் ஒரே நேரத்தில் வீழ்ச்சி அடைய பெரும் ப

அழியும் பேருயிர்

Image
அழியும் பேருயுர்      சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஈஷா யோக மையம் யானைகளின் வழிதடத்தை, வாழ்விடத்தை ஆக்கிரமித்து கட்டுப்பட்டுள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு, தமிழக அரசின் முரணான பதில் பெரும் விமர்சனத்துக்கும், பேசு பொருளாகவும் ஆகியிருப்பதை நாம் அறிவோம்.     கோவை மாவட்ட வன அலுவலர் அளித்த பதிலில், ” ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையத்தால் வனப் பகுதியில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை. வனப் பகுதியில் ஈஷா அறக்கட்டளை மற்றும் யோகா மையத்தால் கட்டிடங்கள் கட்டப்படவில்லை. யானை வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்யவில்லை ” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட யானைகளின் வழித்தடமோ, வாழ்விட பகுதியோ இல்லை எனவும் பதில் கொடுத்துள்ளனர்.      ஆனால் 17.8.2012-ல் கோவை மாவட்ட வன அலுவலர் திருநாவுக்கரசு எழுதிய கடிதம் தான் ஈஷா யோக மைத்திற்கு எதிராக எழுதப்பட்ட முதல் புகார். அதில், ஈஷா யோக மையம் அமைந்துள்ள பகுதி யானைகளின் வழித்தட பகுதி என்றும், இந்த இடத்தில் சட்டவிரோதமாக கட்டிடங்களை கட்டியதால் யானைகள் மனிதர்கள் இடையேயான முரண்பாடு அதிகரித்து வ