Posts

Showing posts from September, 2021

ஜவ்வாதுமலை கானுலா - 12 (பகுதி 3)

Image
#ஜவ்வாதுமலை #கிழக்குதொடர்ச்சிமலை #கர்நாடககிரி_கோட்டை பகுதி 3:- மீண்டும் பழங்குடி குட்டி அண்ணா      முக்குத்தி கல் மலையை கடந்த பின் அடுத்து தெரியும் அந்த நெட்டு மலையை கடந்துவிட்டால் பிறகு கோட்டை வரை சமதளமான பாதை தான் என்றார் சங்கர். எனக்கும் ஒரு கட்டத்தில் எப்போ தான் நெங்குத்தான மலையேற்றம் இல்லாத சமதள மலை பாதை வருமோ என்றாயிற்று.       சங்கர் கை காட்டிய அந்த நெட்டுமலையை அடைந்த பின் வந்த வழியை திரும்பி பார்த்த போது மூக்குத்திகல் மலை தூரத்தில் இருந்து. அடிக்கடி நாய் குரைக்கும் சத்தமும், யாரோ விசில் அடித்து தன் இருப்பதை சொல்லுகிற சத்தமும் நாங்கள் முக்குத்திகல் மலையில் இருக்கும் போதே கேட்டது. சங்கரிடம் விசாரித்த போது சிரித்துக் கொண்டே சொன்னார் குட்டி அண்ணா மேல வந்துட்டாங்க என்று. நாங்கள் நான்கு மணி நேரமாக மலை ஏறிக்கொண்டு இருக்கிறோம், இன்னும் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்தால் தான் கோட்டைக்கு சென்று சேர முடியும். ஆனால் குட்டி அண்ணாவுக்கு நாங்கள் அழைப்பு கொடுத்து பேசும் போதே மணி மதியம் 12 ஆகியிருந்தது, கிட்ட தட்ட ஒன்னரை மணி நேரத்தில் அவர் கோட்டை வாசலுக்கு வந்துவிட்டார் அதுவும் சமையல

ஜவ்வாது மலை கானுலா - 12 (பகுதி 2)

Image
#ஜவ்வாதுமலை #கிழக்குதொடர்ச்சிமலை #கர்நாடககிரி_கோட்டை பகுதி 2:- மலையேற்றம் தொடங்கியது       பழங்குடி நண்பர் குட்டி சொன்ன சுற்றிக்கொண்டு செல்லும் இரண்டாம் வழியில் மலை ஏற முடிவு செய்து, நடக்க தொடங்கினோம். சில தூரம் தரைகாட்டில் நடை பயணம் முடிந்து, முழுமையான மலையேற்றம் ஆரம்பம் ஆனது.       பழங்குடி நண்பர் சங்கருடன் எல்லாரும் மலையேற தொடங்கும் போது மணி காலை 10ஆகியிருந்தது. குட்டியும் எங்களுடன் கொஞ்ச தூரம் வந்து எங்களை வழியனுப்பினார்.     மலை ஏற்றம் தொடங்கிய 30 நிமிடத்திலேயே ஊகித்து கொண்டேன், நிச்சயம் இந்த மலையேற்றம் அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. உடன் மலையேறியோர் முகத்தில் அதற்குள் சோர்வு குடி கொண்டுவிட்டது, இத்தனைக்கும் நாங்கள் அடிவார மலையேற்றத்திலேயே தான் இருந்தோம். பிறகு சங்கர் எங்கள் ஆறு பேருக்கும் ஊன்றி நடக்க குச்சிகளை வெட்டி கொடுத்தார்.  மலையேற்றத்தில் முதல் அடையாளம் என்ற ஒரு பெரும் பாறை பரப்பிற்கு வந்து சேர்ந்தோம். இங்கு கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு செல்வோம் என்றார்.      சோர்வாக இருந்தாலும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டாம் பிறகு மலையேற்றம் இன்னும் கடினமாக மாறிவி

தமிழர்களின் அடையாளம் பனை

Image
     தமிழர்களின் வாழ்விலும், வரலாற்றிலும் நீண்ட நெடிய அருபடாத மரபை க கொண்டது பனை மரம், இதன் உயரத்தை ப் போன்றே இதன் வரலாறும் நெடியது. சங்க காலம்முதல் சமகாலம்வரை பனையின் வகிபாகம் பெறுமதியானது. பன்நெடுங்காலமாக இந்த மொழியோடும், இந்த மக்களோடும் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கும் மரம் பனை மரம். தமிழ் சமூகத்திற்கு அளப்பறிய பங்களிப்பை க் கொடுத்துள்ளது . பனைமரத்தை இன்று செங்கல் சூலைகளுக்காக வெறும் 50,100 ரூபாய்க்கு வெட்டப்படுவது தமிழினத்திற்கு பெரும் இழிவு. ஒரு சமூகத்தின் பண்பாட்டை முதுகில் சுமந்த ஒரு மரத்தை வெட்டி வீழ்த்தும் இழிநிலைக்கு இச்சமூகம் தள்ளப்பட்டுள்ளது வேதனையிலும் வேதனை.        தமிழகத்தில் சந்தனமரத்திற்கு இணையாக அதிக அளவில் ஒரு மரம் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளது என்றால் அது பனைமரம்தான். பனை மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுவதற்கு இரண்டு முக்கிய காரணிகள் இருப்பதாக என்னளவில் நான் உணர்கிறேன்.        முதல் காரணம் பண்பாட்டு ரீதியாக இம்மண்ணின் அடையாளங்களைத் திட்டமிட்டு அழிக்க முற்படுவது தான். இதை நாம் ஆழமாக அவதானிக்க வேண்டும், சூழலியல் குறித்த பறந்த பார்வை உள்ளவர்களால் நிச்சயம

ஜவ்வாதுமலை கானுலா - 12

Image
#ஜவ்வாதுமலை #கிழக்குதொடர்ச்சிமலை #கர்நாடககிரி_கோட்டை பகுதி 1 : முதல் நாள் மலையேற்றம்     ஜவ்வாதுமலையின் 3000 அடி உயரத்தில் கிட்டதட்ட 15கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் மிக பிரம்மாண்டமான கோட்டையை தேடிய பயணம்.      ஓராண்டுக்கு முன் ஜவ்வாதுமலையின் படைவீடு வனப்பகுதிக்கு மேற்கே 15கி.மீ தொலைவில் இருக்கும் கோட்டைமலை கோவிலுக்கு சென்ற போது அறிமுகமானார் நண்பர் Anbarasan நாங்கள் இருவரும் பக்கத்து பக்கத்து ஊர் என பேசும்போது தெரிந்தது, அன்றில் இருந்து ஜவ்வாதுமலை அல்லது பெரும்பாலும் எந்த மலைபயணமாக இருந்தாலும் அவர் எனக்கும் நான் அவருக்கும் தகவலை முன்கூட்டியே சொல்லி உடன் செல்வோம்.      கடந்த ஆண்டு எங்கள் ஊருக்கு வடக்கே 10கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூசிமலைகுப்பம் காட்டில் உள்ள சமணர் கற்படுககைகளை பார்க்க ஒன்றாக சென்றிருந்தோம், அதன் பின் தொடர் வேலைகளால் இருவரும் ஒருங்கே சொல்ல வாய்ப்பில்லாமல் இருந்தது, நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த சனிக்கிழமை (28.08.21) அவரின் பயண நண்பர்களோடு ஜவ்வாதுமலையில் இருக்கும் ஒரு பழங்கால கோட்டையை பார்க்க போகிறோம் நேரம் இருந்தால் உடன் இணைந்து கொள்ளுங்க என சொல்லிருந்தார்