ஜவ்வாது மலை கானுலா - 8
ஜவ்வாதுமலை காட்டுப்பயணம் அண்ணனோடு நான் கொல்லிமலைக்கு பயணம் செல்லும் போதே அரிதுல் அண்ணனிடம் இருந்து அழைப்பு வந்தது, டேய் தம்பி அண்ணாக்கும் உங்கூட காட்டுக்கு போகனுன்னு ஆசையா இருக்கு கூட்டிட்டு போடான்னு சொன்னாங்க. சரிங்க அண்ணா நான் கொல்லிமலை பயணம் போய்ட்டு வந்ததும் ஜவ்வாது மலைக்கு போலாம் - ன்னு சொல்லிருந்தேன். அண்ணா சொந்த ஊர் தஞ்சாவூருக்கு அருகில் கல்லூரி படித்தது சென்னையில் தான் ஆனாலும் சில காலம் மலேசியாவிலும், துபாயிலும் இருந்ததால் வடமாவட்ட ஊர்கள் அவருக்கு அவ்வளவு பரிட்சயம் கிடையாது. கொல்லிமலை பயணம் முடிச்சி ஊர் திரும்பும் போதே அண்ணாவுக்கு அழைப்பு கொடுத்து திருச்சியில் இருந்து வேலூர் செல்லும் பேருந்தில் ஏறி, போளூர் வந்துருங்கவும் என சொல்லிட்டு, நானும் கொல்லிமலையில் இருந்து கிளம்பி அன்றே இரவே செங்கம் வந்து சேர்ந்தேன். அவரும் இரவு 11மணி திருச்சியில், வேலூருக்கான பேருந்தில் ஏறிவிட்டதாக சொல்லிருந்தார். 6மணி நேரம் பயணம் என்பதால் அடுத்த நாள் அதிகாலையில் வந்து சேர்ந்துடுவாங்க என்பதால் கொல்லிமலைக்கு என்னோடு வந்த தம்பியின் வீட்டில் (செங்கம்) இரவு தங்கிவிட்டேன்.