இயற்கையின் முதல் எதிரி மனிதன்
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் - காடும் உடைய தரண் ஒரு நாட்டிற்கு அரணாக எது இருக்க முடியும் என்பதை பற்றிய வள்ளுவனின் கூற்று தான் இக்குறள், ஆனால் இன்றைய இயந்திர மனிதர்களாகிய நாம் இயற்கையை எவ்விதம் காண்கிறோமோ அவ்வாறே அதன் தோற்றத்தையும், அதனுடைய பயன்களையும் நம் மனக்கண்ணில் புதைத்து வைத்து கொள்கிறோம். இதை ஐயா நம்மாழ்வார் பின் வருமாறு குறிப்பிடுகிறார், ஒரு ஆசாரி மரத்தை பார்க்கும் போது இது நாற்காலிக்கு ஆகுமா, கலப்பைக்கு ஆகுமானு பார்க்குராரு, ஒரு வியாபாரி மரத்தை பார்க்கும் போது இது விறகுக்கு ஆகுமா, சட்டத்துக்கு ஆகுமானு பார்க்குராரு, ஒரு விவசாயி மரத்தை பார்க்கும் போது மரத்தோட இலைகளை கால்நடைகளுக்கு தீவனம் போடலாமா, பழத்த எடுக்கலாமான்னு பார்க்குராரு, அந்த மரத்தோட பட்டுபோன குச்சிகளை விறகுக்கு ஆகுமானு இன்னொரு குழந்தை பார்க்குது, இப்படி அவரவர் சூழலுக்கேற்ப மரங்களை தங்களுக்கான பொருளாக காண்கின்றனர், இயற்கையை பற்றியோ மரங்களை பற்றியோ மனிதனின் இத்தகைய சிந்தனை என்பது எப்போதும் ஒரே மாதிரி இருந்ததில்லை, மாறாக மனித இனத்தின் ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியிலும் இயற்கையை பல்வேறு வடிவங்களில் அ