Posts

Showing posts from November, 2023

மஞ்சு மலை காட்டுப்பயணம்

Image
#காவிரி_வடக்கு_வனஉயிரின #சரணாலயம் #கிழக்கு_தொடர்ச்சி_மலை #கானகனின்_கான்      கடந்த ஆண்டு சத்தியமங்கலம் குன்றி மலையில் இருந்து அடர்ந்த காட்டின் ஊடாக பயணித்து மாதேஸ்வரன் மலைக்கு சென்ற போது ஏற்பட்ட அதே திகில் நிறைந்த பயண அனுபவம் இம்முறை மஞ்சு மலைக்கு சென்ற போதும் நிகழ்ந்தது.      பிறந்த நாளின் நினைவாக எப்போதும் நமக்கு நெருக்கமாக இருக்கும் காடு, மலைக்கு பயணம் செல்லலாம் என ஏற்கனவே முடிவு செய்திருந்தேன்.      அதன்படி தேன்கனிக்கோட்டைக்கு அருகில் இருக்கும் அய்யூர் வனப்பகுதிக்குள் (காவிரி வடக்கு வன உயிரின சரணாலயம்) உள்ள தொழுவப்பெட்டா மலைக்கு செல்வது என்றும் பின் அங்கிருந்து ஏற்கனவே போக நினைத்த பெட்டமுகிலாம் சென்று பின் இறுதியாக பஞ்சபள்ளி அணையை பார்த்துவிட்டு வீடு திரும்பலாம் என்பது தான் பிறந்த நாளுக்கான பயண திட்டமாக இருந்தது.      ஆனால், நாம் திட்டமிடாத பயணங்களே நமக்கான நிறைவான நினைவுகளை கொடுத்துவிடுகின்றன.      அய்யூர் வனத்திற்குள் தனித்து இருக்கும் தொழுவப்பெட்டா மலை கிராமத்திற்கு செல்வதகான வழியை வழக்கம் போல் Google Map-ல் பார்த்த போது, அடர்ந்த காடுகளை, மலைகளை தாண்டி மஞ்சமலை என்ற ம

நுரோந்துசாமி மலைப்பயணம்

Image
#காவிரி_வடக்கு_வனஉயிரின #சரணாலயம் #கிழக்கு_தொடர்ச்சி_மலை #கானகனின்_கான் #யானைக்காடு ஜவலகிரி வனப்பகுதி  - நடுகல் - இளநீர் கோயில் - நுரோந்துசாமி மலை மடம்       மஞ்சிமலை காட்டுப் பயணத்திற்கு பிறகு, காவிரியின் வடக்கு வன உயிரின சரணாயலத்தின் மலைப்பகுதிகளில் இருக்கும் தனித்த மலை கிராமங்கள் குறித்து வழக்கம் போல் Google Satellite Map-ல் தேட ஆரம்பித்தேன். அப்போது ஓசூர், தளி அடுத்த ஜவலகிரி வனப்பகுதியின் மலைகளில் நிறைய சிறிய சிறிய மலை கிராமங்கள் இருப்பதை பார்த்தேன்.      ஜவலகிரியில் இருந்து இன்னும் தொலைவில் உள்ள மலை கிராமங்களை தேடிப்பார்த்த போது, ஜவலகிரி காட்டுப்பகுதியில் இருந்து தெற்கே 50கி.மீ தொலைவில் நுரோந்து சாமி மலை என்ற மலை கிராமம் தனித்து இருப்பது தெரிந்தது. கிராமத்தின் பெயரே வித்தியாசமாக இருப்பதால் நிச்சயம் அங்கு சென்று பார்த்துவிட வேண்டும் என முடிவு செய்திருந்தேன்.      ஓசூரில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (17.11.23) காலை நுரோந்து சாமி மலைக்கான பயணம் ஆரம்பமானது. மிதமான வெயிலும், வானம் ஓரளவு கறுத்தும் இருந்தன. தளி பகுதியை கடந்து ஜவலகிரி வரும் வரை சாலையோரங்களில் ஏராளமான பனை மரங்க

கிளை(த்த)ப்பனை, பண்ணந்தூர்

Image
     பல பேர் பதிவுகளிலும், பல முறை செய்திகளில் இப்பனைகளை பார்த்திருந்தாலும், இப்போது தான் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.      நூற்றாண்டு வரலாறு கொண்டுள்ள இப்பனைகள், இன்று இறையின் வடிவாக மக்களால் பூசிக்கப்படுகிறது. இப்பனைகளின் காய்ந்த மட்டைகளும் கூட மக்கள் தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளாமல் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு உணவு சமைக்க எரிபொருளாக மட்டுமே பயன்படுத்துகின்றனர்.      முதிர்ந்த இரண்டு கிளைப்பனைகள் ஓரிடத்திலும், அதற்கு எதிரே ஓரளவு இளம் இரண்டு கிளைப் பனைகளையும் நாம் காண முடிகிறது. இயல்பான பனை மரங்களில் இருப்பதை விட இவற்றில் ஓலையும், மட்டையும், கருக்குகளும் கூட சற்று வித்தியாசமாக இருக்கிறது.      ஓலைகள், மட்டைகள் இயல்பை விட அளவில் சிறிதாகவும் மட்டைகளின் கருக்குகள் இயல்பை விட பெரியதாகவும் இருக்கிறது.      இதற்கு முன்னர், வேலூர் மாவட்டத்தின் செதுவலை கிராமத்தில் பார்த்த ஆறு கிளைகள் கொண்ட பனையும், திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணி - வந்தவாசி சாலையில் ஆவணியாபுரம் அருகில்  பார்த்த நான்கு கிளைகள் கொண்ட பனைகளின் பனங்காயும், பனபழமும் இயல்பான பனையை போலத்தான் இர